100 பேரில் முஷ்டி மைதுனம் செய்கிறேன் என்று ஒத்து கொண்டவர்கள் 99 பேர் என்றால் ஒருவன் பொய்யன் என்று சிக்மன்ட் ப்ராய்ட் கூறினார். கரமைதுனம் என்பது அருவருக்கத்தக்க செயலோ, முறையோ அல்ல. அது ஒரு இயற்கையான நிகழ்வு. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஓர் வடிகால்.
தலைவர் முருகேசன் சொல்வது போல் நிறைவேறாத காம இச்சையுடன் அலைபவன் நடமாடும் வெடிகுண்டுதான். முற்காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் ஏகப்பட்ட எக்ஸ்போஷர். அந்த காலத்திலும் முறைகேடானா உறவுகள் இருந்திருக்கின்றன. ஆணுக்கு எடிபஸ் காம்ப்ளெக்ஸ், பெண்ணுக்கு எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ். இதுவே ஆண்களுக்கு வயதான் பெண்களிடம் தோன்றும் காம இச்சை. எந்த வகையில் பார்த்தாலும் மனைவியை தவிர வேறு பெண்களிடம் போய் நோய் இத்தியாதி பெற்றுவருவதை விட கர மைதுனம் மிக மிக பாதுகாப்பானது. மேலும் சில பெண்களை தொட்டான் கெட்டான் என்ற வழக்கிற்க்கேற்ப நொடித்து போனவர் பலபேர்.
கர மைதுனத்தின் சிறப்புகள்
செரோடொனின் , ஆக்சிடோசின் சுரப்பு அதிகமாவதால் நிம்மதியான உறக்கத்திற்கு வழி செய்கிறது.
ப்ரோஸ்டேட் கான்சர் வராது
ரத்த அழுத்தம் குறைகிறது
ஸ்ட்ரெஸ் குறைகிறது
பெல்விக் தசைகள் வலுவடைகிறது
தப்பான பல லாட்ஜ் வைத்தியர்களினால் பல இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. ஆகவே இளைஞர்களே கூடிய மட்டும் முஷ்டி மைதுனம் செய்யுங்கள். வாழ்வில் வெற்றிகளை குவியுங்கள்!!!!!
Read more »


